இந்த ஆண்டிற்கான தமிழின் சாகித்ய அகாடமி விருது ஆ.மாதவனுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் கடைத்தெருவை எழுதிய கலைஞன்.புனைவுகளில் யதார்த்த படைப்பை இயல்பாகக் கொண்டவை ஆ.மாதவனின் எழுத்துகள்.
கிருஷ்ணப் பருந்து
நுட்பமான மன ஓட்டங்களை ஆண் பெண் உறவுகளைச் சித்தரிக்கும் அழகிய நாவல்.குருஸ்வாமி,ராணி,வேலப்பன் ஆர்டிஸ்ட் என ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்நாவலின் நாகர்களே.இதில் இடம்பெரும் ஒரு ஓவியம் கூட கதாபாத்திரம் தான்.மனதை கரைக்கும் வட்டார மொழி நுட்பம்.
புணலும் மணலும்
ஆ.மாதவனின் மற்றுமொரு சிறந்த படைப்பு. புனைவின் அற்புத மொழி வடிவம் இந்நூல்.பங்கி எனும் அவலட்சணமான பெண்,அவள் தகப்பன்,தாமோதரன் ஆகயோரின் உளசஃசிக்கல்கள் உறவுகள் கடல் அருகில் வாழ்வு ஆறு மற்றும் சமகால மாற்றங்களைப் பற்றிய சிறந்த படைப்பு.
ஆ.மாதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மோனிகா மாறன்